இஸ்லாம் ஒரு சமநிலையான மார்க்கம். எனவே அதற்கான உழைப்பும் சமநிலைத்தன்மை கொண்டதாக அமைவது அவசியமாகிறது. இந்தச் சமநிலை இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளல், அதனை நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டிலும் பிரதிபலிக்க வேண்டுமன எதிர்பார்க்கப்படுகிறது.
சமநிலை என்பது பிரபஞ்ச விதியாகும். முழுப்பிரபஞ்சமும் இச்சமநிலையின் அடிப்படையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தவகையில்தான், அது மார்க்கத்தின் இயல்பாகவும், யதார்த்தமும் இஸ்லாமிய அழைப்பாளர்களது அனுபவமும் வற்புறுத்துகின்ற அம்சமாகவும் உள்ளது. முஸ்லிம் சமூகம் இச்சமநிலைப் பண்பைக் கைவிட்டு, இரு தீவிரங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளும் போதே அதில் கோளாறு தோன்ற ஆரம்பிக்கிறது.
இந்த உம்மத் ஒரு நடுநிலையான உம்மத். முன்பு வாழ்ந்த சமூகங்களிலிருந்து அது பெரிதும் வேறுபடுகிறது. யூதர்கள் இறை கட்டளைகளை நிறைவேற்றாமல் சமநிலை பிறழ்ந்தனர். கிறிஸ்தவர்களோ தீவிரமாகச் சென்று வழிதவறினர். எனவேதான், யூதர்களை 'கோபத்திற்குட்பட்டவர்கள்' என்றும், கிறிஸ்தவர்களை 'வழிதவறியவர்கள்' என்றும் அல்லாஹ் அடையாளப்படுத்தினான். யூதர்களது அறிவோடு செயல் இணையாதிருந்ததும், கிறிஸ்தவர்கள் அல்லாஹ் பற்றிய சரியான அறிவின்றி அவனை வணங்கியதுமே இதற்கான காரணமாகும். இந்தப் பின்னணியிலேயே ஸுஃப்யான் பின் உயைனா (றஹ்)